பக்கங்கள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

நீ என்னை யாசித்தால்...

 


நான் என்னையே

என்னிடம் 

யாசித்து நிற்கும்

சமயத்தில்...

நீ என்னை யாசித்து

நிற்கிறாய்..

இங்கே எதுவும்

யாசிக்காமல் கிடைப்பது இல்லை...

நீ யாசித்து நிற்கும் நானோ

என் வசம் இல்லை...

கடனாக

அந்த காலத்தின் கைகளில்

அடைக்கலம் ஆகி விட்டேன்

நீ ஏதேனும் பிணை வைத்து

இருந்தால்

அதை கொடுத்து

என்னை மீட்டி செல்...

இல்லை அமைதியாக இரு...

உனது யாசித்து நிற்கும்

கரங்களை கொஞ்சம்

கீழே இறக்கினால்

நலம்...

எனது கண்களில் வழியும்

நீரை கொஞ்சம் நிறுத்த

அது போதும் எனக்கு..

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக