பக்கங்கள்

திங்கள், 17 செப்டம்பர், 2018

பிடிப்புகள்

அன்பர்களே வணக்கம்.
    இன்று நாம் பார்க்க இருப்பது பிடிப்புகள். என்ன இது வித்தியாசமாக இருக்கிறது இன்றைய தலைப்பு என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அதைத்தான் நான் உங்களிடம் விளக்கமாக சொல்ல இருக்கிறேன்.
     நாம் பிறந்தது முதல் இறப்பு வரை எதையாவது நமதுகைகள் பிடித்துக்கொள்ளவே விரும்புகிறது.அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை. நீங்களும் யோசியுங்கள். பிறந்த சிறுகுழந்தையிடம் உங்கள் கைகளையோ இல்லை ஏதாவது பொருளையோ கொடுத்து பாருங்கள். அது ஆவலாக அதை பிடிக்கவே நினைக்கும். நீங்கள் அதை எவ்வளவு தள்ளி பிடித்தாலும் அதை அது உற்சாகமாக பிடிக்கவே முனைப்பு காட்டும். இந்த செயல் தான் பிற்காலத்தில் எதைஎடுத்தாலும் தனதாக்கி கொள்ள தூண்டுகிறது. ஆனால் அந்த செயலை தடுக்க முடியாது. சிறுவயதில் அது சாத்தியமும் அல்ல. ஆனால் கொஞ்சம் வளர்ந்த பிறகு நாம் எல்லாவித பிடிப்புகளிலிருந்தும் விலகி இருக்க பழக வேண்டும். அப்போது தான் நாம் பரந்த மனப்பான்மை வளர்க்க முடியும்.
      அதைவிடுத்து நாம்அந்த செயலை ஊக்கப்படுத்தினால் நாம் தான் அந்த செயலுக்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டும். நீங்கள் எல்லாவித பிடிப்புகளையும் கொஞ்சம் உதறி பாருங்கள். பிறகு எவ்வளவு நிம்மதியாக ஆனந்தமாக வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் அதை நாம் உடனடியாக அடைந்து விட முடியாது. அதற்கு நமது மனதை நாம் பழக்கப்படுத்ததான் வேண்டும்எஎச்சச
    பிடிப்புகள் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று நல்லது மற்றது கெட்டது.நல்ல பழக்கங்கள் நல்ல விசயங்களை கேட்டல் நல்ல சான்றோர்களுடன் நட்பு  நல்ல கொள்கைகள் ....இப்படி நல்லது எதுவானாலும் அதில் பிடிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
     மோசமான விசயங்கள் மோசமான பழக்கங்கள் மோசமான நட்பு.....இப்படி எதுவெல்லாம் மோசமாக உள்ளதோ அந்த பிடிப்பை உதறிதள்ள வேண்டும்.
   ஆனால் நடைமுறையில் பல மனிதர்கள் மோசமான விசயங்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நல்ல பல விசயங்களை உதறி தள்ளி விடுகிறார்கள். இதுதான் வேதனையான விசயம். இதை நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை எனில் நமது வாழ்க்கை வீணாக போய்விடும்.
   இன்றைய சமுதாயத்தில் நல்ல விசயங்களை தேடி கண்டு பிடிப்பதாக உள்ளது. மோசமான விசயங்கள் மிகவும் எளிமையான கிடைத்துவிடுகிறது.நல்ல விசயங்கள் மிகவும் அடக்கமாக ஒருமூலையில் இருக்க மோசமான பல விசயங்கள் அலங்காரம் செய்து கொண்டு மக்களை ஈர்த்து விடுகிறது. அந்த மாயவலையில் மதிமயங்கி விட்டில் பூச்சிகளாக மக்கள் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்.
  மக்களாகிய நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நல்ல பல விசயங்களை நோக்கி நம்மை அழைத்து செல்ல வேண்டுவோம்.
    நல்ல விசயங்களை நல்ல பழக்கங்களே நம்மை எப்போதும் பாதுக்காக்கும் வளையம்.அதைவிடுத்து நாம் வெளியே வர முயற்சி செய்தால் நம்மை மோசமான அரக்கர்கள் கொன்று சீரழித்து விடுவார்கள்.
      அதனால் நேயர்களே நாம் நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தெரிந்தபிறகு நல்ல விசயங்களை நோக்கி நமது மனதை கடிவாளம் போட்டு இழுத்து கொண்டு போவோம். அப்போது தான் நாம் நல்வழிபட இயலும். இல்லை எனில் மோசமான சகதியில் சிக்கி சீரழிந்து போவோம் என்பதை மனதில் வைத்து ஆனந்தமான வாழ்க்கை வாழ நல்ல சிந்தனைகளை மனதிற்கு எடுத்து சொல்லி புரிய வைப்போம். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.
    சரி நேயர்களே மீண்டும் நான் உங்களை மற்றொரு பதிவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.நன்றி வணக்கம்.🖐️🖐️🖐️👍👍👍🙏🙏🙏.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக