பக்கங்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2018

தன்னை மதித்தல்

அன்பர்களே வணக்கம்.
       இன்று நாம் பார்க்க இருப்பது தன்னை மதித்தல்.ஒருவர் எப்போதும் தன்னை தானே மதித்து நடக்க பழக வேண்டும். ஏனெனில் தன்னை தானே மதித்து நடந்துக்கொள்ள தெரிந்தால் தான் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை அடைய இயலும்.
       ஒருவருக்கு சுய மரியாதை என்பது மிகவும் அவசியம்.ஒருவர் தன்னை தானே மதித்து கொள்ள தெரியவில்லை என்றால் மற்றவர்கள் எப்படி மரியாதை கொடுப்பார்கள்?
     இந்த உலகில் முன்னேறியவர்கள் எல்லாம் தன்னை தானே மதித்து கொண்டவர்கள் தான். ஒவ்வொரு முறை நீங்கள் சாதிக்கும் போது உங்கள் ஆன்மா தான் முதலில் ஆனந்தம் அடையும். பிறகு தான் வெளியுலகத்திற்கு உங்கள் சாதனை தெரியும்.
     நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் செயல்களை முதலில் நீங்கள் மதிக்க கற்று கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் செயல்களை முதலில் மதித்தால் மற்றவர்கள் எவ்வளவு கேவலமாக உங்கள் செயல்களை விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் உங்கள் முன்னேற்றத்தை நோக்கியே உங்கள் பயணம் இருக்கும். மாறாக நீங்கள் சுயமதிப்பை இழந்தால் நீங்கள் எவ்வளவு பெரிய லட்சியங்களையும் கைவிட நேரிடும்.
     தகுந்த நேரத்தில் தகுந்த மரியாதை கிடைக்க நீங்கள் உங்களை தட்டிக்கொடுத்துக்கொண்டே வாருங்கள். நீங்கள் தான் உங்களுக்கு நல்ல சக்தியை தர இயலும். மாறாக சுய மரியாதை இல்லை என்றால் எல்லாம் சீட்டு கட்டில் கட்டிய கட்டடங்கள் போல சரிந்து வீழும்.
     நீங்கள் உங்களை எந்தளவிற்கு நேசிக்கிறீர்களோ அந்தளவுக்கு சாதனைகளை செய்வீர்கள். மாறாக நீங்கள் எந்தளவுக்கு உங்களை ஊதாசீனப்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு நீங்கள் உங்கள் வாழ்வில் சரிவை சந்திப்பீர்கள். அதனால் நேயர்களே நீங்கள் முன்னேற சாதனை செய்ய நீங்கள் உங்களை மதித்து நடந்து கொள்ள தான் வேண்டும்.
   பல சாதனையாளர்கள் தன்னை தானே தட்டி கொடுத்து சபாஷ் போட்டு வேலை வாங்க தெரிந்தவர்கள்.அதனால் தான் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்தியும் சோர்வில்லாமல் இன்னும் பல செயல்களை செய்ய தூண்டுகிறது.
     நேயர்களே நான் சொல்வது புரிந்ததா?கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டு தான் இருக்கும். அதனை அவர்கள் தான் கண்டறிந்து வெளிக்கொணர வேண்டும். அதை செய்ய வைப்பது உங்களை நீங்கள் மதித்தல்.💐💐💐
      நேயர்களே நீங்களே உங்களை மதிக்காமல் மற்றவர்கள் மரியாதை தரவில்லை என்று அங்கலாப்பது என்ன நியாயம்?.
    உங்களை நீங்கள் மிக உயர்ந்தவர்களாக மதியுங்கள். பல சாதனைகளை செய்யுங்கள். வெற்றி மட்டும் உங்கள் காலடியில் இல்லை. இந்த உலகமே உங்கள் காலடியில் தான்.😊😊
          நேயர்களே நீங்கள் உங்களை மதித்து நிறைய சாதனைகள் செய்து வானில் உயர உயர பறக்க கற்று கொள்ளுங்கள். உங்கள் வெற்றி உங்கள் கைகளில்.👍👍👌👌💐
    சரி நேயர்களே மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.😊🖐️🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக