பக்கங்கள்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வேடிக்கை

அன்பர்களே வணக்கம்.
                    நாம் இப்போது பார்க்க இருப்பது வேடிக்கை. ஆம். நம் வாழ்வில் நடப்பது அனைத்துமே வேடிக்கை. நாம் அனைவரும் வேடிக்கையை விரும்புகிறோம்.ஆனால் நமது வாழ்க்கையை ஒரு வேடிக்கையாக பார்க்க விரும்பமாட்டேன் என்கிறோம். அதுதான் ஏன் என புரியவில்லை.
       நாம் ஒரு திருவிழாவிற்கு செல்கிறோம்.அங்கே ஆடல் பாடல்கள் நிகழ்ச்சி வைத்திருக்கிறார்கள்.அதை ரசித்து பார்க்கிறோம்.அதுபோல தான் வாழ்க்கை என்பதை மறக்கிறோம்.
      நமது வாழ்க்கையில் நாம் மிகவும் பற்று வைத்திருக்கிறோம்.பந்தபாசம் நமது கண்ணை மறைக்கிறது.இதுதான் நம்மை நமது வாழ்க்கையை வேடிக்கை பார்க்க விடாமல் தடுக்கிறது.அந்த மாயை திரையை நாம் விலக்கினால் நாம் நமது வாழ்க்கையை வேடிக்கை பார்க்க முடியும்.
     ஏன் நான் நமது வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சொல்கிறேன் என்றால் அப்போது தான் நாம் நிம்மதியாக நமது வாழ்க்கையை நடத்த முடியும்.
      நமது இன்பம் துன்பம் இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். இதை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியாது. ஆனால் அதிலிருந்து நம்மால் விலகி இருக்க முடியும். அதனால் தான் இதை நான் வலியுறுத்தி சொல்கிறேன்.
       இன்பம் வந்தால் ஏற்றுக்கொண்டு குதூகலிக்கும் மனது ஏன் துன்பத்தை ஏற்க மறுக்கிறது.அதை யோசியுங்கள். நாம் நாடகத்தில் அனைத்து சம்பவங்களையும் ரசித்து பார்க்கிறோம். இன்னும் ஒருபடி மேலாக இன்னொருவர் வாழ்க்கையில் ஏதாவது துன்பம் நடந்தால் வேடிக்கை பார்க்கும் மனதால் நமது வாழ்க்கையில் நடக்கும் போதுமட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது.சிந்தியுங்கள்.
       ஏன் எனில் அது வேறொருவர். அவருக்கும் நமக்கும் தொடர்பு இல்லை. ஆனால் நமது வாழ்வில் நமது வாழ்க்கை துணை பிள்ளைகள் எல்லோரும் நம்முடன் இணைந்தவர்கள் என்று நினைப்பதால்.
       இந்த நினைவை நீங்கள் மாற்றினால் ஒழிய இந்த உணர்வில் இருந்து விடுபட முடியாது. வேடிக்கை என்பது பொதுவானது.ஆனால் நாம் தான் அதை அடுத்தவர்களுக்கு ஒரு மாதிரியும் நமக்கு ஒரு மாதிரியுமாக பிரித்து பார்க்க கற்று கொண்டுள்ளோம்.இதனால் தான் பிரச்சினை தீவிரமாகிறது.இந்த பிரச்சனை நாம் உடலோடு அதிக பற்று வைப்பதால் வந்த பிரச்சினை. அதை ஆன்மாவோடு தொடர்புபடுத்தி எப்போது பார்க்க தொடங்குகிறோமோ அப்போதே நாம் நமது வாழ்க்கையை தள்ளி இருந்து வேடிக்கை பார்க்க கற்றுக்கொள்வோம்.
      அதனால் அன்பர்களே கொஞ்சம் மனதை ஒருமுகப்படுத்தி ஆத்மஞானத்தை விரைந்து கைகொள்ளுங்கள்.அப்போது எல்லா நன்மைகளையும் அடைவதோடு உண்மை எது பொய்மை எது என்று பிரித்தறியும் தன்மை வரும். அதோடு உங்கள் வாழ்க்கையை லாவகமாக கையாண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.அப்போது எல்லாம் உங்களுக்கு வேடிக்கை பொருளாக தான் தெரியும். எதன்மேலும் ஒரு பற்று இல்லாமல் உங்கள் கடமைகளை மட்டும் செய்வதில் ஆர்வம் கொண்டு ஆனந்தமான வாழ்க்கை நீங்கள் வாழ்வீர்கள்.
    சரி நேயர்களே. மிகவும் மகிழ்ச்சி. வேடிக்கை பார்க்க கற்று கொண்டதற்கு. மீண்டும் சந்திப்போம். அதுவரை எப்போதும் போல🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக