பக்கங்கள்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

எது சுதந்திரம்

அன்பர்களே வணக்கம்.
       நாம் இன்று பார்க்க இருப்பது சுதந்திரம். எது சுதந்திரம் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பட்டிமன்றம் மட்டும் தவறாமல் நடக்கிறது. ஆனால் சுதந்திரம் என்பது என்ன என்று மட்டும் நமக்கு தெளிவாக தெரிவதில்லை. இப்போதாவது நாம் சுதந்திரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முனைப்பு காட்டலாமே.
     சரி நேயர்களே விசயத்திற்கு வருவோம். சுதந்திரம் என்று நாம் நினைப்பது எதுவுமே சுதந்திரம் இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
        சுதந்திரம் என்றால் நாம் நமது இஷ்டப்படி நடந்து கொள்வது என்று பெரும்பாலானவர்கள் புரிந்து கொண்டு இருக்கிறோம். அதுவல்ல சுதந்திரம்.
    இன்று சுதந்திரம் என்கிற போர்வையில் நமது சமூகம் அடிக்கும் கூத்துக்களுக்கு அளவே இல்லை. மேலும் சமூக வலைத்தளங்களில் நாம் ஒருசிலர் பதிவிடும் வக்கிரமான சொற்கள் அடங்கிய பதிவுகளை பார்க்கும் போது நிச்சயமாக நமது தமிழ் அன்னை மனதிற்குள் கண்ணீர் வடிப்பாள் என்பது மட்டும் நிச்சயம். ஏன் இந்த வக்கிரம்.மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் வார்த்தையாக வடிவம் பெறுகிறது. நமது தமிழ் அன்னையை நாம் ஆக்கபூர்வமான விசயங்களில் பயன்படுத்தி தமிழின் பெருமையை பரப்ப இங்கே ஆயிரம் விசயங்கள் கொட்டிக்கிடக்க நாம் மிகவும் மோசமாக அதை பயன்படுத்துவது நமது தாயை அவமதிப்பதற்கு சமம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்தை ஆக்கபூர்வமான விசயங்களுக்கு பயன்படுத்தினால் தான் நாம் சுதந்திரம் அடைந்ததற்கான பலனை பெறமுடியும். அதைவிடுத்து அருவருக்கத்தக்க விசயங்களில் பயன்படுத்தினால் நமது தமிழ் அன்னை நமது மோசமான நடத்தையை பார்த்து மனம் வெதும்ப மாட்டாளா.அதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?.சிந்தியுங்கள் சுதந்திர விரும்பிகளே.
      அடுத்து ஒரு விசயம் பேச்சு. எவ்வளவு அழகு அழகான வார்த்தைகள் இருக்க மிக மிக தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி தமிழ் அன்னையை தலைகுனிய வைப்பது தான் சுதந்திரமா?.எந்த மொழிகளிலும் இல்லாத பொக்கிஷமான வார்த்தைகள் ரசிக்கும் படியான வார்த்தைகள் சரம் சரமாக பூக்களை கோத்ததுப்போல தமிழில் இருக்க நாம் தேடி தேடி மோசமான  தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்துவது சரிதானா என்பதை உங்களது பார்வைக்கே விட்டு விடுகிறேன். மேலும் படித்தவர்கள் தான் மிக கேவலமாக நடந்து கொள்கிறார்கள். நிச்சயமாக ஏட்டு படிப்பு இல்லாதவர்கள் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை அழகாக பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் இங்கே எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
     மேலும் சுதந்திரம் என்று சொல்லி கொண்டு கன்னாபின்னாவென உடை உடுத்துவது உங்களை ஒரு கேலிசித்திரமாக பார்க்க உதவுமே தவிர வேறு எதற்கும் அது பயன்படாது.மேலும் பொது இடங்களில் மிகவும் நாகரிமாக நடந்து கொள்வது தற்போது குறைந்து வருகிறது. யார் வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் நடந்து கொள்வோம் என்று கூறுவது சுத்த முட்டாள்தனம் ஆணவம் பிடித்த மனிதர்கள் என்பதை உங்களை அடையாளப்படுத்துமஅடையாளப்படுத்துமே தவிர அது சுதந்திரம் என்று நீங்கள் நினைத்துக்கொள்வது மடத்தனம் அல்லாமல் வேறு என்ன?
      சரி நேயர்களே இந்த சுதந்திர தினத்திலாவது மேற்கூறிய மோசமான எல்லா செயல்களையும் விடுத்து மிகவும் பண்புள்ளவர்களாக மாறி சமுதாயத்திற்கு எந்த வகையிலும் ஊறுவிளைவிக்காமல் நடந்து கொள்ள முயற்சி செய்வோமாக.
    உண்மையான சுதந்திரம் என்பது சமுதாயத்தை அமைதியாக வைத்திருப்பதில் நமக்கு பங்களிப்பை கொடுத்து இன்றைய இளைஞர்களை கட்டுக்கோப்பாக வழிநடத்தி சுதந்திரம் என்பது இஷ்டப்படி நடந்து கொள்வது இல்லை. நமது கடமைகளையும் உரிமைகளையும் அழகாக அடுத்தவர்களின் தலையீடு இல்லாமல் தடைகள் உடைத்து நல்ல விசயங்களை செய்வதில் உள்ளது என்பதை புரிய வைத்து நாமும் ஆனந்தமாக இருந்து அடுத்தவர்களையும் ஆனந்தமாக வைத்திருப்போமாக!
சரி நேயர்களே!நான் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து 🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக