பக்கங்கள்

சனி, 11 ஆகஸ்ட், 2018

தைரியம்

அன்பர்களே வணக்கம்.
       இப்போது நாம் பார்க்க இருப்பது தைரியம். இன்றைய இளைஞர்களுக்கு தைரியம் என்றால் என்ன என்று சரியாக புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது வேதனை.
           இன்றைய இளைஞர்கள் தைரியம் என்றால் வன்முறை என்று அர்த்தம் செய்து கொள்கிறார்கள்என்று தான் நினைக்கிறேன். ஆனால் தைரியம் என்பது மன அளவில் சம்பந்தப்பட்டது.ஆமாம்நேயர்களே.
         எதிர்க்க வேண்டிய விசயங்களை எதிர்த்து மனோரீதியாக பலப்படுத்தி வைராக்கியமாக காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து முட்டாள்த்தனமாக வன்முறையில் ஈடுபடுவது அமைதியை சீர்குலைக்கும் தவிர அதனால் வேறுபயன் ஒன்றும் இல்லை.
        நல்ல விசயங்களை செய்வதற்கு கூட தற்போது பயப்பட வேண்டியதாக உள்ளது. இது எவ்வளவு கொடுமை.இதைத்தான் நாம் மனோரீதியாக வெல்ல வேண்டும். நல்ல விசயங்களை செய்வதற்கு எத்தனை வித தடைகள் வந்தாலும் நாம் அகிம்சை பலப்படுத்தி அதேசமயம் தைரியத்தை ஊக்கப்படுத்தி நமது அந்த நல்ல காரியத்திலேயே கண்ணாக இருந்து எதிர்விளைவுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதே தைரியம்.
        மோசமான விசயங்கள் நடக்கும் போது வாய்மூடி மௌனியாக இல்லாமல் எங்கே தவறு நடக்கிறதோ அதை தட்டி கேட்பதே தைரியம். அதைவிடுத்து கோழைப்போல பயந்து பின்வாங்குவது அல்ல.
    இன்றைய இளைஞர்கள் நல்ல விசயங்களை செய்வதற்கும் மோசமான விசயங்களை அதே இடத்தில் தட்டி கேட்பதற்கும் மிகவும் பயப்படுகிறார்கள்.இது எப்படி சரியாகும். நமது மனசாட்சியே நம்மை கொன்றுவிடாதா?.நாம் வாழும் வரை நல்ல விசயங்களை செய்வதற்கும் மோசமான விசயங்களை தட்டி கேட்பதற்கும் மிகவும் அவசியமஅவசியமாக தேவைப்படுவது தைரியம்.
         தைரியம் என்பதை தவறாக புரிந்து கொண்டு சமுதாயத்தை நாமே கெடுத்து விடக்கூடாது. பெரிய பெரிய தலைவர்கள் எவ்வளவோ விசயங்களை மனோதைரியத்தால் வென்றிருக்கிறார்கள்.மனோதைரியத்தை துணைக்கொண்டே இங்கே அத்தனை விசயங்களும் சாதிக்கப்பட்டிருக்கிறது.
         மோசமான விசயங்களை செயல்படுத்த விடாமல் இருப்பதற்கு நாம் உறுதியாக இருப்பது கூட தைரியம் தான். எந்த மோசமான விசயங்களையும் உறுதியாக கொள்கைப்பிடிப்போடு எதிர்ப்பது கூட தைரியம் தான்.
     நல்ல விசயங்களை செயல்பட விடாமல் இருப்பவர்களை தமது எழுத்துக்களாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாலும் செயல்பட வைப்பதும் தைரியம் தான்.
   ஆக தைரியம் என்பதை சரியாக புரிந்து கொண்டு நாம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது தைரியம். அதைவிடுத்து வன்முறையில் ஈடுபடுவது தைரியம் இல்லை. கோழைகளே வன்முறையில் ஈடுபடுவார்கள்.
   ஆகவே நேயர்களே நாம் தைரியத்தை சரியாக புரிந்து கொண்டு சரியான பாதையில் நடந்தால் நாம் ஆனந்தமாக வாழ்வது திண்ணம்.
   சரி நேயர்களே மற்றுமொரு அழகான தலைப்பில் மீண்டும் சந்திக்கும் வரை 🖐️✋🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக