பக்கங்கள்

புதன், 25 ஜூலை, 2018

தூண்டுதல்

அன்பர்களே வணக்கம்.
     இப்போது நாம் பார்க்க இருப்பது தூண்டுதல். தூண்டுதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று.சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூண்டுதல் இருந்தால் தான் எந்த காரியத்தையும் சாதிக்க முடியும். இந்த வகையில் நாம் மற்றவர்களை எந்தளவு உற்சாகப்படுத்துகிறோமோ அந்தளவுக்கு உற்சாகப்படுத்த வேண்டும்.
         ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் ஏதோவொரு காரணத்திற்காக சோர்ந்து தான் போகிறாரபோகிறார்கள்.அப்போது அவர்கள் அருகில் உற்சாகம் நிறைந்தவர்கள் இருந்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் அப்போது தான் பலபேர் அவர்களை தூற்றுவார்கள். மேலும் அவனை நான் இப்படி செய்ய வேண்டாம் என்று சொன்னேன் கேட்டானா என்பார்கள். மேலும் முன்னாடி எப்போதோ தெரியாமல் அவர்களை மோசமாக பேசியிருந்தாலோ அல்லது மன்னிப்பு கேட்டிருந்தாலும் இந்த தருணத்தில் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதாவது எதிராளிக்கு.அதனால் அவர்கள் கேலி பேச்சுகள் நம்மை சோர்வடைய வைக்கும்.
        சரி .நாம் அடுத்தவர்களுக்கு பொருளாதார உதவி செய்தால் தான் உதவி என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்.நல்ல வார்த்தைகளும் ஒரு உதவி தான். ஒருவனை மேன்படுத்த சரியான வழிநடத்துதல் இருந்து விட்டால் போதும். அவன் மேலும் மேலும் முன்னேறுவான்.
        ஆனால் தற்போது நாம் வாழும் சமுதாயம் நன்றாக பொருளாதார ரீதியில் மேலே வந்தவர்களுக்கே மரியாதை கொடுக்கிறது. ஒருவனை பொருளாதாரத்தை மட்டும் வைத்து எடைப்போட வேண்டாம். ஏனெனில் வாழ்க்கை வசதிகள் என்பது ஆடம்பர வாழ்க்கை என்பது எப்போதும் நிரந்தரம் அல்ல. மேலும் பொருளாதார வசதிகள் இருப்பவர்கள் எல்லாம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு மனநிம்மதியோடு இருக்கிறார்கள் என்று பொருள் இல்லை.
         மேலும் சிறுகுழந்தைகள் முதல் நாம் அவர்கள் எந்த விசயத்தை செய்தாலும் முதுகில் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.அவர்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் பாராட்டுங்கள். அவர்களை சோர்வடைய செய்யாதீர்கள். இந்த சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் அவர்களை விடாதீர்கள். ஏனெனில் ஒரு நல்ல குழந்தைகள் எண்ணம் இந்த சமுதாயத்தில் என்றும் மதிக்கப்பட்டது இல்லை. அதனால் அவர்கள் இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையில் எரிந்து சாம்பல் ஆகக்கூடாது.
              குழந்தைகள் நல்ல எண்ணத்தை ஊக்கப்படுத்த தவறாதீர்கள். இந்த சமுதாயத்தில் மதிக்கப்படாத விசயங்கள் தான் பிற்காலத்தில் பலராலும் பேசப்படுகின்றன.அதனால் இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையை கண்டுக்கொள்ளாமல் உனது கொள்கையில் நீ உறுதியாக இரு.நான் உனக்கு எப்போதும் துணை நிற்பேன் என்று சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
                இந்த சமுதாயம் என்பது மாயையால் கட்டுப்பட்டது.அதனால் நீ உனது ஊக்கம் குறையாமல் சாதிக்க வேண்டிய விசயத்தை சாதித்து விடு என்று கூறி தூண்டினால் அவன் திறமை குடத்தில் இட்ட விளக்கு போல இல்லாமல் அனைவருக்கும் பயன் அளிக்கும்.
            அதைவிடுத்து அவர்கள் திறமை தெரியாமல் திட்டினீர்கள் என்றால் அவன் எப்படி சாதனையாளன் ஆவான். ஆட்டுமந்தை கூட்டம் போல ஒரே படிப்பில் சேர்த்தவர்கள் கதி இன்று என்னவாயிற்று?யோசனை செய்யுங்கள். சொத்தை விற்று படிக்க வைத்தீர்கள். உங்கள் சொத்தும் போனது .அவன் கனவுகளும் சிதைந்து போனது.அதனால் நீங்கள் உங்கள் கற்பனை கனவுகளை உங்கள் பிள்ளைகள் திணிக்காமல் அவர்கள் கனவுகளை நிறைவேற்ற தூண்டுதலாக இருங்கள்.
              உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் ஒதுக்கும் தூண்டுதலுக்கான ஊக்கத்தை கொடுத்ததாகவே அர்த்தம். என்ன நேயர்களே ஆனந்தமாக உங்கள் குழந்தைகளை வளர்க்க முடிவெடுத்து விட்டீர்கள்தானே.மகிழ்ச்சி.
         .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக