அந்த பிரமாண்டமான வீட்டில்
வாழ்ந்து கொண்டு
இருப்பவர் சில நாட்களில்
உற்சாகம் இழந்து
அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய
அந்த வீட்டில்
உள் அலங்காரமாக செதுக்கிய
கலையை ரசிக்காமல்
அது நாளடைவில் பொலிவிழந்து
அவரின் ரசனைக்காக
ஏங்கி கிடக்கிறது...
புதிதாக இருந்த போது
தாம் எவ்வாறெல்லாம்
புகழப்பட்டோம் என்று
நினைத்து நினைத்து
ஏக்க பெருமூச்சு விட்டு
அந்த நாளின் நினைவுகளை
அசைப்போட்டு ஆறுதல்
தேடிக் கொண்டது...
அந்த வீட்டின் வெளி சுவரில்
வரையப்பட்ட சாலையோர
புழுதியில் நனைந்த
ஓவியம் ஒன்று
புதிதாக ரசிக்கப்பட்ட
அதே சுவையோடும் பொலிவோடும்...
உற்சாகமாக இருக்கிறது ...
அந்த சாலையில் தினந்தோறும்
நடந்து செல்லும்
அந்த வீடற்ற மனிதரின்
கலா ரசனையோடு கூடிய
பார்வையால் தினமும்
நின்று நிதானமாக
தாம் காதலோடு
ரசிக்கப்படுவதை பார்த்து...
#அந்தவீடற்றவரின்கலாரசனை
#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக