பக்கங்கள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

அங்கே சிறைப்பட்ட பறவைகளின் ஏக்கம்...


ஒருத்தி இருக்கிறாள்...

அவளது இருப்போ 

கட்டற்ற ஆற்றை போல அல்லாமல் 

ஒரு மென்மையான நதியை போல 

மிகவும் சுதந்திரமாக 

வழி நெடுகிலும் கை குலுக்கி 

நீர் துளிகள் படர்ந்த பூக்களை

வழி நெடுகிலும்

மிகவும் ரசனையாக 

சிதற விட்டு போகிறாள்...

அவளது வாழ்வின் ரசனையான 

நகர்வுகளை 

துளி துளியாக 

ரசித்து பார்த்து கொண்டு 

இருக்கிறது 

அங்கே ஒரு அதிசய 

சுதந்திர பறவை...

இங்கே ஒரு பெரும் சிறைக்குள் 

அடைப்பட்டு கிடக்கும் 

ஏராளமான பறவைகள் 

அதில் சலித்து சிறகு படபடக்க 

ஏக்கமாக வேடிக்கை பார்த்து

சத்தமிட்டு 

அந்த சுதந்திர பறவையின் 

கவனத்தை திருப்ப முயற்சி செய்து 

தோற்று விடுவதை

பாவமாக இந்த பிரபஞ்சம்

கையறு நிலையில் 

வேடிக்கை பார்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:09/08/26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக