பக்கங்கள்

திங்கள், 26 ஜனவரி, 2026

மனம் எனும் ஊஞ்சலில்...


உனக்காக நறுமணம் சூழ்ந்த

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட

என் மனம் எனும் 

கம்பீரமான கோட்டையில் 

கட்டி வைத்த

ஊஞ்சலில்...

நீ வந்து அதில் மகிழ்வோடு

அமர்ந்து ஆடும் தருணத்தை

அசைப் போட்டு

காத்திருக்கிறேன் இங்கே...


நீயோ அந்த தரம் தாழ்ந்த மனிதன் தனது மனம் எனும்

சிதிலமடைந்த கோட்டையில் அலங்கரித்து...

அந்த முள்ளில் கட்டி வைத்த

எவரும் கண்டுக்காத

தூசி படிந்த ...


எப்போது அறுந்து விழுமோ என்று

கவலைக் கொண்டு

போவோர் வருவோருக்கு

காட்சிக் கொடுத்த...


ஊஞ்சலை நம்பி போய் 

அமர ஓடிப் போவதை 

யதேச்சையாக பார்த்து

உன் பெயரை உச்சரித்தே

உன் பின்னால் ஓடி வருகிறேன்...

அதை காதில் வாங்காமல்


நீ அந்த பழுதடைந்த ஊஞ்சலில்

அமர்ந்த நொடியில்

கயிறு அறுப்பட்டு அந்த முட்புதரில்

வீழ்ந்து ...

அந்த அவமானம் தாங்காமல்

ஓடோடி

அருகில் உள்ள கிணற்றுக்கு

பலியாகி விட்டதை பார்த்து

நான் விக்கித்து நிற்கிறேன்...

எதுவும் செய்ய தோன்றாமல்...


அப்பொழுது என் மனமெனும்

அலங்கரிக்கப்பட்ட கோட்டையில்

உள்ள பூக்கள் வாடி உதிர்ந்து

உனக்கு அஞ்சலி செலுத்துவதை

பார்த்து தாங்கொணா துயரத்தில்

குலுங்கி குலுங்கி அழுவதை

போவோர் வருவோர் எல்லாம்

சிறு வருத்தம் தோய்ந்த

முகத்தோடு பார்த்து

எனக்கு ஆறுதல் சொல்லி

கடந்து செல்கிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/01/26.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக