பக்கங்கள்

செவ்வாய், 20 ஜனவரி, 2026

இங்கே எனக்கு இயல்பென இருப்பது அவர்களுக்கு இயல்பில்லை..


சாதாரணமாக வாழ

உனக்கென்ன கஷ்டம்

என்று என்னை சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறார்கள்...

எனக்கு அசாதாரணத்தை தவிர 

வேறு எப்படியும்

வாழ தெரியாது என்கிறேன் நான்..

இங்கே எனக்கு இயல்பென

இருப்பது அவர்களுக்கு

இயல்பில்லை...

இங்கே ஒரே நிகழ்வு

பல பேருக்கு பல வகைகளில் காட்சி

தருவது யாருடைய பிழை?

பதில் இங்கே வெறும் ஆழ்ந்த 

அமைதி மட்டுமே...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக