#இன்றையதலையங்கம்:-
இயற்கையை நேசியுங்கள் இல்லையேல்...:-
அரசியல்வாதிகள் எப்போதும் திருந்த மாட்டார்கள்... இந்த பிரபஞ்சத்தில் மக்களாகிய நாம் தான் பூமியை காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருக்கிறோம்...குவாரி என்பது நிச்சயமாக மிகவும் ஆபத்தான விசயம்... இங்கே சில அறிவாளிகள் பிறகு சாலை வசதி கட்டிடங்கள் எப்படி கட்டுவது என்று கேட்பார்கள்... மேலைநாடுகளில் இப்படி தான் கட்டிடம் கட்டுகிறார்களா என்று அங்கே உள்ள கட்டணங்களை பற்றிய தகவல்கள் கூகுளில் தேடுங்கள்...
தமிழ் நாடு இப்படியே போனால் பாலைவனம் ஆவது உறுதி... மேலும் மண் நெகிழ்வு தன்மையை பெறும் போது நிலநடுக்கம் அந்த பகுதியை எதிர் காலத்தில் தாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை..
இயற்கை சீரழிவு இப்படி தான் நிகழ்கிறது...
பெரும் ஆசைக் கொண்ட அதிகார போதையில் உள்ள அரசியல்வாதிகள் கொஞ்சம் இயற்கை நேசர்களாக இருந்தால் தமிழ் நாடு தப்பிக்கும்...
யோசியுங்கள் மக்களே..🙏.
இயற்கையை நேசியுங்கள்...
இல்லை என்றால் உங்கள் வருங்கால சந்ததி மோசமான சூழலில் சிக்கி தவிப்பதை நீங்கள் சூட்சமமாக வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் மேலே இருந்து...
#இயற்கையைநேசியுங்கள்.
#இன்றையதலையங்கம்.
#அதிகாரபோதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:28/01/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக