பக்கங்கள்

புதன், 17 செப்டம்பர், 2025

மழைக்கால நேரமொன்றில் ஒரு கோப்பை தேநீரோடு...


ஒரு கோப்பை தேநீரோடு

இந்த மழைக் கால தொடக்கத்தில்

இளம் காலை வேளையில்

எழுதிக் கொண்டுசில இதமான இசையோடு இருக்கும் நொடிகளில் உருகிக் கொண்டே இருக்கிறது வாழ்வின் சுவை...

அதை அப்படியே பருகி முடித்து மீண்டும் எழுதிக் கொண்டே இருக்கிறேன் ...

சில தூறல்கள் மெல்லிய இசையோடு 

இந்த பூமியை 

குளிர்விக்கும் நேரத்தில்

அதோ அங்கே சிறகடித்து 

பறக்கும் பறவை

அந்த தூறலில் 

நனைந்துக் கொண்டே 

எனது அறையின்

சாளரத்தின் வழியே

என்னை தலை உயர்த்தி பார்க்கிறது...

நான் அதை பார்த்து 

புன்னகைக்கும் நேரத்தில்

அது தனது மெல்லிய குரலில் 

பிரியத்தோடு

ஒரு சுவாரஸ்யமான இசையை 

என் செவிகளுக்கு விட்டு 

சென்றது தான்

இந்த நாளின் பொக்கிஷமாக..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக