உருண்டோடும் காலத்தில்
சிக்கி சின்னாபின்னமாகி
கிடக்கும் பொழுதை
கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள நீ என் கையில்
இருக்கிறாய்...
உன் சூட்டின் ஆவி
என் நாசியை நனைத்து
உயிர் வரை சென்று
களிப்படைய செய்து
அத்தனை இன்னல்களையும்
ஒதுங்கி நின்று ஆச்சரியமாக வேடிக்கை பார்க்க வைத்து
மிடறு மிடறாக பருகும்
அந்த தேநீர் எனும் உற்சாக பானத்தின் கோப்பையில்
என் உலகம் உற்சாகமாக
நிகழ்த்தி காட்டி களிக்க வைக்கிறது...
இந்த விடியலின் ஆரம்ப புள்ளியின் அடிச்சுவடில்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/08/25/புதன்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக