#இன்றையதலையங்கம்
#தொலைந்தஜனநாயகம்:-தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தல் நடத்த முடியாமல் தோற்றுவிட்டது என்றால் ஜனநாயகம் அங்கே தோற்றுவிட்டது என்று தானே அர்த்தம்...
தேர்தல் ஆணையம் ஒரு தனி அதிகாரம் படைத்த அமைப்பு என்பதெல்லாம் மக்களையும் மாநில கட்சிகளையும் ஏமாற்றும் வேலையா...
இப்படி வெற்றி பெற்று அரசாள வேண்டும் என்று நினைப்பதெல்லாம் எவ்வளவு அருவருக்கத்தக்க விஷயம் என்று ஒரு தலைவருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ அல்லது இப்படி யாரின் அதிகாரத்திற்கோ அல்லது பணத்திற்கோ விலை போகிறோம் என்று குற்ற உணர்ச்சி இல்லாமல் நடக்கும் தேர்தல் ஆணையத்திற்கோ இல்லை என்றால் நாம் எப்படிப்பட்ட ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று இங்கே ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி எழுகிறது அல்லவா...
ஓட்டு போட்ட ஒவ்வொரு வாக்காளரும் இங்கே கூனி குறுகி போய் அவமானமாக நினைக்கிறோம் இங்கே நடந்த தேர்தல் ஆணையத்தின் அருவருக்கத்தக்க செயல்பாடுகளை நினைத்து... ஆனால் அவமானமாக நினைக்க வேண்டியவர்கள் ஆழ்ந்த மௌனம் கொண்டு இருப்பது ஏன் என்று இங்கே வாக்காளர்களாகிய நாங்கள் கேள்வி கேட்கிறோம்... நீங்கள் ராகுல் காந்திக்கு பதில் சொல்வதாக நினைக்க வேண்டாம்... ஜனநாயக திருவிழாவில் தொலைந்து போன ஜனநாயகத்தை தேடி அலைந்துக் கொண்டு பித்து நிலையில் இருக்கும் வாக்காளர்களாகிய எங்களுக்கு தங்களது மேலான மௌனத்தை கலைத்து குற்றத்தை ஒப்புக் கொண்டு எங்களிடம் தொலைந்த ஜனநாயகத்தை திருப்பி கொடுத்து விட்டு நடையை கட்டுங்கள் என்று இங்கே கோரிக்கை வைக்கிறோம்...இதை செய்வீர்கள் என்று நம்புகிறோம்...
இப்படிக்கு எதையும் கண்மூடித்தனமாக நம்பி நம்பி ஏமாறும் இந்திய #ஜனநாயகமக்கள்...
#இன்றையதலையங்கம்.
இளையவேணிகிருஷ்ணா.
நாள்:12/08/25/செவ்வாய்க்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக