எப்போதும் என் தவறுகளை
தன் நிர்மலமான
புன்னகையால்
குழந்தையும் தெய்வமும்
மன்னித்து ஒருவர் பார்வையாலேயே
அரவணைக்கிறார்...
இன்னொருவரோ
தன் செயல்களாலே
ஒரு குறுஞ்சிரிப்பை காட்டி
எனது காலை
கட்டிக் கொள்கிறார்...
இந்த குணங்கள் இல்லாமல் தான்
நான் பொழுது விடிந்து
பொழுது மறையும் வரை
எவர் எவருடனோ சண்டை போட்டு
என் மனதை குப்பையாக்கி எதுவுமே
நடக்காதது போல
சென்று விடுகிறேன்...
மனமோ தான் போட்ட
அன்றைய அந்த
சண்டை குப்பைகளை
வெளியேற்ற முடியாமல்
அதனுள் அழுந்தி மூச்சடக்கி
சாக கிடக்கும் போது
நான் கொஞ்சம் என் உள்ளுணர்வால்
அங்கே எட்டிப் பார்த்து
மூர்ச்சையாகி கிடப்பதை
அந்த சாலையில்
போவோர் வருவோர்
எல்லாம்
வெறுமனே வேடிக்கை பார்த்து
கலைந்து செல்வதை
என்னை நேசிக்கும் காலம்
கண்ணீர் வடித்து
பெரும் மௌனத்தோடு
என்னை
அடக்கம் செய்கிறது...
#இளையவேணி கிருஷ்ணா.
நாள்:17/07/25/வியாழக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக