பக்கங்கள்

வெள்ளி, 11 ஜூலை, 2025

அந்த மயானத்தில் பேரமைதியில்...

 


அந்த மயான அமைதியில் தான் 

பேரமைதி கொண்ட பூக்கள் 

அவிழும் ஓசையை கேட்க முடிகிறது...

அந்த மயானத்தில் 

எப்போதும் வசித்து வந்த 

குயிலும் கூட தன் குரலை 

காற்றோடு கலந்து விடாமல் இருக்க 

சற்றே மெனக்கெடலோடு அடக்கி 

அந்த பூக்கள் அவிழும் ஓசையில் 

லயித்து கிடக்க 

அங்கே அன்று தான் வந்த 

காற்றற்ற உடலும் கொஞ்சம் 

சிலிர்த்து அடங்கியதில் 

புரிந்துக் கொண்டேன்

அந்த பூக்களின் பெரும் சக்தியை...

அதுவரை அந்த மயானத்தின் 

ஒரு மூலையில் பெரும் அமைதியை 

கைக்கொண்டு இவற்றை எல்லாம் 

கவனித்து வந்த இயற்கையை 

பெரும் காதலோடு 

நேசித்து வந்த நான்...

#இளையவேணி கிருஷ்ணா

நாள் 11/07/25/

வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக