ஓடிக் கொண்டே இருக்கும்
தற்கால சிலபல
துன்ப நிமிட துகளின்
புழுதியில் இருந்து
சற்றே எனை
விடுவித்துக் கொண்டு
இதோ என்னை தாங்கி செல்லும்
இந்த காலமெனும் தோணியின்
ஒரு மூலையில்
என்னை
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
கடந்த கால நினைவுகளின்
சுகங்களை கொஞ்சம்
அசைப்போட்டு அனுபவித்து
சற்றே இளைப்பாறுகிறேன்...
இதை பார்த்த அந்த சந்திர தேவனோ
கொஞ்சம் காதலோடு
தன் கிரணங்களால்
என்னை அரவணைத்து
காதல் மொழி
என் காதில் கிசுகிசுத்து
சிலிர்ப்பூட்டி மகிழ்வதை பார்த்த
காலமும் கொஞ்சம்
நெகிழ்ந்து தான் போனது...
எத்தனை துன்பத்தின் சுவடுகளை
சுமந்து ரணமாகிய
மனதோடு இதுநாள் வரை
பயணித்து இருந்தாளோ என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/06/25.சனிக்கிழமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக