பக்கங்கள்

சனி, 3 மே, 2025

காலம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தின் நாயகி நான்...


காலம் ஆடும் கண்ணாமூச்சி 

ஆட்டத்தின் நாயகி நான்!

நான் அந்த ஆட்டத்தில் 

எங்கோ தொலைந்து ஆனந்தமாக 

அந்த சூட்சம காட்டில் சுற்றி 

திரிகிறேன்...

காலமோ என் மீது கொண்ட 

பெரும் காதலை மறக்க முடியாமல் 

கதறி அழுது அரற்றி 

எனை தேடி களைக்கிறது...

நானோ எந்த பற்றுதலும் இல்லாத 

ஞானி போல அந்த சூட்சம காட்டில் 

ஒரு ஆயிரம் வண்ணங்கள் கொண்ட 

பட்டாம்பூச்சி போல 

பறந்து திரிகிறேன்...

காலம் என் மீது கொண்ட பேரன்பின் 

காயத்தை பற்றிய 

எந்தவித நெருடலும் இல்லாமல்... 

#இரவுகவிதை.

நாள்:03/05/25/சனிக்கிழமை 

#இளையவேணிகிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக