பக்கங்கள்

திங்கள், 2 செப்டம்பர், 2024

காற்று ஒன்றே கனிவோடு ஒத்தடம் கொடுக்கிறது...


சிறகில் அளவில்லாத 

ரணத்தோடு இரத்தம் வழிய

வானில் பறக்கும் 

அந்த பறவைக்கு

காற்று ஒன்றே 

இங்கே கனிவோடு ஒத்தடம் 

கொடுக்கிறது...

இங்கே எந்த ஆராவாரமும் 

இல்லாமல் செய்யப்படும் 

செயல்களுக்கு மதிப்பில்லை 

என்ற போதும் 

அலைகள் இல்லாத 

எந்தவித ஆராவாரமும் இல்லாத 

கடலும் 

இங்கே நம்மில் ஒரு சிலரின் 

கவனத்தை சத்தம் இல்லாமல் 

பெறத்தானே செய்கிறது....

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 02/09/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக