பக்கங்கள்

வியாழன், 25 ஜூலை, 2024

இரவு கவிதை 🍁

 


யாரோ எவ்வளவு பெரிய ஆளாக 

வேண்டும் என்றாலும் 

இருந்து விட்டு போங்கள்... 

அது உங்கள் லௌகீக விஷயம்... 

ஆனால் அந்த லௌகீக எல்லையில் 

என்னை வைத்து பார்க்காதீர்கள்... 

நான் எப்போதும் வேறானாவள்... 

இந்த பிரபஞ்சமே 

எனை படைத்து விட்டு 

கொஞ்சம் மிரண்டு தான் 

கிடக்கிறது... 

அதில் நீங்கள் வெறும் தூசி எனக்கு...

வெற்று ஆராவாரங்களின் 

சத்தத்தில் எல்லாம் 

என் பெரும் ஆகர்ஷண சக்தி 

ஒளி(லி) இழந்து விட 

நான் எப்போதும் 

அனுமதிப்பதில்லை...

#இரவு கவிதை 🍁

2 கருத்துகள்: