பக்கங்கள்

புதன், 12 ஜூன், 2024

இன்றைய தலையங்கம்: தரம் தாழ்ந்த அரசியல்

 


மாநில உரிமைகள் நசுக்கப்படுகிறதா:-

நீர் வளத்துறையை கர்நாடகாவிற்கு கொடுத்து தமிழ் நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் எப்போதும் காவிரி பிரச்சினையில் இணக்கம் இருந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக அதே சமயத்தில் இவ்வளவு தரம் தாழ்ந்த அல்லது வன்மத்தை வைத்து செயல்படும் பிஜேபி உங்களுக்கு தேச நலனில் அக்கறை உள்ள கட்சியாக தோன்றுகிறது என்றால் நீங்கள் தான் முதலில் தேச துரோகி என்று சொல்வேன்... வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களை நீர் வளத்துறைக்கு போட்டால் எங்கே அவர் பாரபட்சம் இல்லாமல் பணி சமரசம் செய்து விடுவாரோ என்று மனதில் வைத்துக் கொண்டு செயல்படும் ஒரு மத்திய அரசாங்கம் உண்மையில் மாநில உரிமையை குழி தோண்டி பாதாள லோகம் வரை சென்று புதைத்து விட துடிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல...

என்னை பொறுத்தவரை பிஜேபி உண்மையில் கருணையை மனசாட்சியை ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டு இருக்கிறது...

இவர்கள் அரசியலை அரசியலாக பார்க்காமல் கலவரத்தை விதைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்... இவர்கள் மக்களை கொடுமைப்படுத்தி அதில் சுகம் காணும் மனநிலை உள்ளவர்கள் என்று சொன்னால் நிச்சயமாக அது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்...வாழ்க ஜனநாயகம் 😌😌😌.

#மாநில #உரிமைகள் #நசுக்கப்படுகிறதா???

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக