பக்கங்கள்

புதன், 12 ஜூன், 2024

இரவு கவிதை 🍁

 


காலத்தின் நிழலில் 

இளைப்பாற வழியின்றி 

ஓடிக் கொண்டே இருக்கும் நான் 

கொஞ்சம் கொஞ்சமாக 

நிலத்தின் கைகளின் பேரன்பையும் 

உதறி தள்ளிவிட்டு எங்கோ

மனமுடைந்த நிலையில் 

ஓடிக் கொண்டிருக்கும் போது 

அந்த காலம் கொஞ்சம் 

என் கையை பிடித்து 

இழுத்து ஆர தழுவிக் கொண்டது 

எனது கண்ணீருக்கும் அங்கே 

ஒரு இளைப்பாறுதல் தேவை 

என்பதை 

அந்த காலத்தின் நெஞ்சை 

நனைத்து விட்ட 

எனது கண்ணீர் துளிகள் மூலம் 

உணர்ந்தேன்...

இரவு கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா/12/06/24/

புதன் கிழமை/முன்னிரவு 10:15.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக