பக்கங்கள்

புதன், 26 ஜூன், 2024

வாழ்வியல் (1).

 


ஒரே மாதிரியான வாழ்வு சலித்து விட்டது என்று கூறுபவர்கள் அதிகம்.. ஆனால் அதிலிருந்து வெளியே வருபவர்கள் எத்தனை பேர் என்று விரல் விட்டு எண்ணி விடலாம்... முதலில் இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று அடிக்கடி நாம் உணர வேண்டும்... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்கேயாவது உங்களுக்கு அறிமுகமே இல்லாத ஊரில் இறங்கி அங்கே வாழும் மக்களின் வாழ்வியல் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்... உங்கள் கூடவே ஆதார் அட்டை எடுத்து செல்வது நல்லது... ஏனெனில் தற்போதைய உலகியல் சூழலில் உங்களை சந்தேகமாகவே பார்ப்பவர்கள் அதிகம்... நமது பாரதத்திலேயே அத்தனை அழகான ஊர்கள் உள்ளது... மக்களின் மனதில் மனிதத்தன்மை இன்னும் வற்றி விடவில்லை என்பது நமக்கு கூடுதல் பலம்... பயணத்திற்கு என்று தனியாக சேமித்து 

வைத்துக் கொள்ளுங்கள்... அதில் இருந்து எடுத்து பயண செலவிற்கு செலவிடுங்கள்... அங்கே எதிரில் தெரியும் மனிதர்கள் வயலில் வேலை செய்யும் மனிதர்களிடம் அவர்கள் வேலை கெடாமல் உரையாடுங்கள்.. முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.... இப்படி வருடத்தில் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பயணத்தை மேற்கொள்ளுங்கள்... இந்த பிரபஞ்சம் உங்களை அரவணைத்துக் கொள்ளும்... நமக்கு மேலேயுள்ள சக்தி நம்மை கடனே என்று வாழ சொல்லவில்லை என்பதை மனதில் வையுங்கள்... வாழ்க்கை ஆனந்தமாக வாழுங்கள்...

#வாழ்வியல்(1).

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக