பக்கங்கள்

செவ்வாய், 21 மே, 2024

ஆத்ம விசார கவிதை 🍁


எனது இறப்பிற்கு 

உங்களிடம் இருந்து 

ஆழ்ந்த இரங்கலை 

நான் எப்போதும் 

எதிர்பார்ப்பது இல்லை...

நான் தீயில் வேகும் போது 

அங்கே அகங்காரம் கொண்டு 

நகைக்காமல் இருங்கள் 

அது போதும் எனக்கு...

உங்கள் நகைப்பு எனது வாழ்வை 

பற்றியது என்றால் 

இங்கே என்னை கொஞ்சம் கொஞ்சமாக 

உள்வாங்கும் தீயின் சூட்சம பாடம் 

உங்கள் காதுகளில் விழாத அளவுக்கு 

அஞ்ஞானிகளாகவே

விடை பெறுகிறீர்கள் 

நான் எரிந்துக் கொண்டு இருக்கும் 

சுடுகாட்டில் இருந்து...

#ஆத்ம விசார கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

அந்தி மாலைப் பொழுதில் 5:40

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக