பக்கங்கள்

வியாழன், 30 மே, 2024

நான் சொல்வது கேட்கும் இடத்தில் ஒரு ஓநாய்...

 


நான் சொல்வதை கேட்கும் இடத்தில் 

ஒரு ஓநாய் இருக்கிறது!

தந்திரங்கள் நிறைந்த ஓநாயின் 

மனதை எப்படியோ 

நான் ஆக்கிரமித்து விட்டேன்...

இன்னும் ஒரு சில நொடிகளில் 

நான் அதற்கு சில கட்டளைகள் இட்டு 

பயணிக்க வேண்டும்...

ஆனால் அதற்கு மேல் அதற்கு 

கட்டளை இட மனமில்லாமல் 

நகர்வதை பார்த்து 

அந்த ஓநாய் ஏதோவொன்று 

உந்தி தள்ள 

என் முன் வந்து மண்டியிடுகிறது...

நான் அதன் தலையை 

ஆதரவாக கோதி விட்டு 

எந்த கட்டளையும் பிறப்பிக்காமல் 

கடந்து செல்கிறேன்!

என் இயல்பை மீறிய செயலை 

நான் செய்கிறேன் என்று 

அங்கே பலர் ஆச்சரியபப்படும் போது 

அந்த ஓநாயின் பேரன்பு கொண்ட 

இயல்பு 

ஒரு மாய திரையால் 

மறைக்கப்படுவதை பார்த்து 

சில கண்ணீர் துளிகள் 

கசிந்து அந்த ஓநாயின் 

உடல் சிலிர்க்கிறது!

இது ஒரு மாய உலகம் என்று!

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன்/30/05/24/முன்னிரவு 7:50.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக