பக்கங்கள்

வெள்ளி, 24 மே, 2024

இரவின் நாடகம்... காலையின் தாண்டவம்...

 


காலையில் எழுந்ததும் குரங்குகள் சண்டை இடுவதில் இருந்து விலக்கி விட பஞ்சாயத்து... இரவு முழுவதும் தெரு நாய்கள் சண்டை அதன் குரல்கள் மற்றும் மது பிரியர்கள் சாலையில் யாரையோ கோபமாக திட்டும் வசவுகள் அந்த ஏழு உலகத்திற்கும் கேட்கும் அளவுக்கு மணிக் கணக்கில் பேச்சு.. இதற்கு இடையில் அதெல்லாம் அமைதி அடைந்ததும் நான் தேவாரம் திருவாசகம் உரக்க வாசித்து காற்றில் கலந்த அந்த கழிவுகளை நீக்கி விட்டு உறங்கலாம் என்றால் ஆயிரம் ஆயிரம் கவலைகள்... கவலைகள் என்றால் என்னை பற்றியா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை... ஏனெனில் நான் எனக்கு என்ன நடந்தாலும் கவலை மட்டும் அடைவதே இல்லை... அது தான் பெரும் வரம் எனக்கு... என்னடா வாழ்க்கை என்று சோர்ந்து போய் உட்கார முடியவில்லை...ஏதொவொன்று இழுத்து செல்கிறது...அது தான் நிஜமா மாயையா... 🚣🏃

நாள் 25/05/24.

சனிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக