பக்கங்கள்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

மதுரை சித்திரைத் திருவிழா

 


வாழ்வின் தாத்பரியம் ஆனந்தம் பேரானந்தம் தான்... அதிலும் சித்திரை என்றாலே மதுரை... மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேஸ்வரர்... மனதிற்கு ஒரு பேரமைதி கொடுத்து விடும் சக்தி மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு உண்டு... சில இடங்களில் நடக்கும் தெய்வீக கொண்டாட்டங்கள் நம்மையும் அறியாமல் நம்மை ஆக்கிரமித்து விடும்... அதில் என்னை ஆக்கிரமித்தது இந்த மதுரை சித்திரை திருவிழா... சைவம் வைணவம் இரண்டையும் இணைத்து ஒரு அருமையான ஆன்மீக பெருவிழா என்றால் நிச்சயமாக அது மதுரை சித்திரைத் திருவிழா தான்... அந்த பேரின்ப நிலைக்கு அந்த சுந்தரேஸ்வரர் நம்மை எல்லாம் தள்ளி விடுவது நம்மையும் அறியாமல் நம் ஆன்மாவை ஆக்கிரமித்து அங்கே சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுவது எதை உணர்த்துகிறது என்றால் இங்கே லௌகீகத்தில் சுகத்தை தேடி அலையாதே மானுடா...இதோ உன் மனதில் ஆக்கிரமித்து சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் என்னில் உன்னை கலந்து விடு! அது உனக்கு சுகத்தை மட்டும் அல்ல பேரின்ப நிலையை கொடுத்து மீண்டும் கருப்பையில் புகாத வண்ணம் ஆத்ம போதத்தை அளிக்கும் என்று சூட்சமமாக சொல்லி விடுகிறார்....

#மதுரைமீனாட்சி

#சுந்தரேஸ்வரர்.

#ஆத்மபோதம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் சித்திரை -1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக