பக்கங்கள்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நான் ஒரு திக்கற்ற சுதந்திர பயணி 🚴🌆

வாழ்வெனும் பெரும் அலையில் 


ஒரு பேரமைதி கரையில்இளைப்பாறுகிறது...

அந்த பேரமைதி திடீரென சிலிர்த்தெழுந்து எந்த திசையில் பயணிக்கலாம் என்று

மேல் மனதிடம் யோசனை கேட்பதை அறிந்து ஓடோடி வந்துசட்டென்று நிறுத்தி விடுகிறது ஆழ் மனது...

இந்த கரையை விட வேறு எது உனக்கு ஆழ்ந்த அமைதியை கொடுத்து விட போகிறது...சும்மா வெறுமனே இந்த மணலில் படுத்து புரண்டு அலை வந்து உன்னை அணைத்துக் கொள்வதை பெரும் காதலோடு ரசித்து உன் அருகில் பறக்கும் அந்த பறவையின் சிறகில் சிலிர்த்து கண்களை மூடி கிடந்து விடுவதில் பெரும் சுகம் உன்னை துளைக்கும்...

அந்த துளைத்தலில் வலி இல்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று சொல்லி

தனது அறையில் சென்று 

முடங்கிக் கொண்டது...

இதோ அந்த பேரமைதியை தேடி நான் அந்த கடற்கரை சாலையில் அலைந்து திரிந்துக் கொண்டு இருக்கிறேன்...

அதை பார்த்தவுடனே எனக்கு கொஞ்சம் தகவல் தெரிவித்து எனக்கு கொஞ்சம் அமைதியை கொடுத்து விட்டு பயணியுங்கள்...

உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்ளும் நான் ஒரு திக்கற்ற சுதந்திர பயணி....

#திக்கற்ற சுதந்திர பயணி.

#தத்துவ கவிதை.

நாள் சித்திரை -2.

காலை 9:38.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக