பக்கங்கள்

புதன், 24 ஏப்ரல், 2024

இளம் காலைப்பொழுது ✨


நேற்றைய நிகழ்வின்

சுவடுகளை துறந்து

உதிக்கும் இந்த ஆதவனின் 

கைகளில் அடைக்கலம்

ஆகிறேன் 

மிகவும் உற்சாகமாக....

எனது கையில் 

அடைக்கலம் ஆன

தேநீர் கோப்பையோ

எனது ருசியில் உனது 

இன்றைய கனவை

துவங்கி விடு என்கிறது...

இதை எல்லாம் கவனித்து கொண்டே 

என்னோடு பயணிக்கும் காலம்

ஒரு சிறு புன்முறுவலோடு 

சத்தம் இல்லாமல் 

என்னை சுமக்கும் கனம் தெரியாமல் 

புத்துணர்வோடு கடந்து செல்கிறது...

என் முன்னே எழும் அலைகளில் 

எனது இன்றைய 

பயணத்தின் திட்டத்தை 

எழுதி விட்டு

அந்த கடல் அன்னையிடம் இருந்து 

விலக மனமில்லாமல்

விலகி செல்கிறேன்...

என் சுவடுகளை 

அந்த அலைகள் வந்து ஆவலோடு

முத்தமிட்டு ஆசீர்வதிப்பதை

அறியாமலேயே....

#காலைகவிதை.

#நாள் 25/04/24.

#இளையவேணிகிருஷ்ணா.

#இளங்காலைப்பொழுது

நேரம் 6:30.

2 கருத்துகள்: