பக்கங்கள்

சனி, 20 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁

 


ஏதோவொரு தேடலோடு

வாழ்க்கை நகர்கிறது!

எதை தேடுகிறோம் என்று

நாமே மறந்து விடும் அளவுக்கு

காலம் நம்மை கை பிடித்து

ஏதோவொரு மாய உலகிற்கு

அழைத்துச் செல்கிறது...

இதுவும் கடந்து போகும் என்று

அங்கே யாரோ என்னை நோக்கி

கூக்குரலிடுகிறார்கள் ...

நானோ அதனால் என்ன

நான் நிச்சலனமான மனதோடு

பயணிக்கும் போது

எதுவும் கடந்து போகட்டும்...

எதிலும் நான் இல்லை

அதனால் எனக்கு 

கவலை இல்லை என்றேன்

அவர்களை பார்த்து நிதானமாக

ஒரு புன்னகையோடு...😊

#இரவு கவிதை 🍁

#நாள்20/04/24.

சனிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக