பக்கங்கள்

வெள்ளி, 15 மார்ச், 2024

கணக்கற்ற துயரத்தின் சதைகளா???


அந்த பிணந்திண்ணி கழுகின் 

பயணத்தில் எல்லாம் 

பிணங்கள் குவியல் 

குவியலாக காட்சி கொடுத்து

அந்த கழுகிற்கு பேரின்பத்தை 

கொடுத்தது...

ஒரு நாள் ஒரேயொரு பிணம்

திடீரென்று அந்த கழுகிடம்

தனது வாழ்நாளில் அனுபவித்த 

சொல்லொணா துன்பத்தை 

துயரத்தை சொல்லி அழுதது...

அந்த துயரத்தை உள் வாங்கிய கழுகு 

யோசித்தது...

இத்தனை நாள் நான் ஆனந்தமாக 

உண்டதெல்லாம் 

கணக்கற்ற துயரத்தின் 

சதைகளா என்று...

தற்போது தன் பசியை அடக்கி 

பறந்து செல்கிறது மேலே மேலே...

அங்கே ஏதோவொரு உலகம்

இந்த துயரத்தின் சாயல் படியாத 

பிணம் ஏதேனும் இருக்கும் 

என்கின்ற நம்பிக்கையோடு...

#காலைசிந்தனை.

#காலைகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/03/24.

சனிக்கிழமை.

நேரம் இளங்காலைப் பொழுது 6:00.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக