பக்கங்கள்

சனி, 30 மார்ச், 2024

இரவு கவிதை 🍁

 


அந்த ஆறுதலுக்கு

ஒரு துணை தேவை என்றதும்

நகர்ந்து கொண்டே இருக்கும்

காலம் கொஞ்சம் நின்று

அதற்கு தோள் கொடுத்தது...

எந்த விலையும் பேசப்படாமல்

ஒரு தோள் கிடைத்தது

இந்த காலத்தில்

ஆறுதலுக்கு ஒரே ஆச்சர்யம்...

கூடவே வந்த கண்ணீரை

அந்த காலத்தின் தோளை தவிர

உண்மையில் யார் அறியக் கூடும்?

இரவு கவிதை 🍁.

நாள் 30/03/24.

சனிக்கிழமை.

✍️இளைய வேணி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக