பக்கங்கள்

வியாழன், 21 மார்ச், 2024

இன்றைய தலையங்கம்...

 



சங்கீத கலாநிதி விருது பெற இவருக்கு எல்லா வித தகுதியும் உள்ளது... வாழ்த்துக்கள் திரு டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு ✨🙏🎻.

இவர் நவீன #சமூக நீதி #காவலரும் கூட... சங்கீதம் ஏதோ ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தம் என்பது போல அகங்கார போதை கொண்ட சில கூட்டங்கள் இவரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறது... இவரை இழிவு செய்பவர்கள் தான் தரம் தாழ்ந்தவர்கள்... எல்லோரும் இசை ஞானம் பெற வேண்டும் என்று ஒரு அபூர்வமான பிராமணர் நினைப்பது ஒரு குற்றம் என்று சொல்பவர்கள் இறந்த பிறகு பாரதி எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் இராமானுஜர் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கொண்டாடி தீர்ப்பவர்கள் இவரையும் அப்படி தான் கொண்டாடுவார்கள்... ஆனால் உண்மையில் இறைவனை உணர்ந்தவர்கள் எந்தவித பேதமும் கற்பிக்காமல் தான் தெரிந்து கொண்ட வித்தையை எல்லோரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆத்மார்த்தமாக நினைப்பார்கள்... மீண்டும் ஒரு முறை அவரது சங்கீத பாண்டியத்திற்கு சமூக நீதி பார்வைக்கு நாம் அனைவரும் ஒரு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம் நேயர்களே 🙏🤝💐🎻.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/03/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக