பக்கங்கள்

வியாழன், 8 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


ஒரு ஷணமும் நான்

என்னை நேசிப்பதை

நிறுத்தியதே இல்லை!

எனக்கு நான் எப்போதும்

ஒரு விலை மதிப்பற்ற

எதனோடும் ஒப்பிட முடியாத

பொக்கிஷம் தான் நான்!

இங்கே அந்த காதல் எனும் நதியில்

நானும் நானும் மட்டுமே

நீராடி மகிழ்ந்து திளைக்கிறோம்!

இங்கே எந்த காயமோ கீறலோ

எப்போதும் நேர்ந்திடாத போது

நான் ஏன் கவலைக் கொள்ள 

வேண்டும் வேறு எதை பற்றியும்?

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/02/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக