பக்கங்கள்

வியாழன், 28 டிசம்பர், 2023

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:- எத்தனை பேருக்கு சத்தம் இல்லாமல் உதவி இருக்கிறார் அந்த மனிதர்.... உண்மையில் அவரை பற்றிய தகவல்களை கேட்க கேட்க நம்மையும் அறியாமல் கண்கள் கலங்கி கண்ணீர் அஞ்சலி செலுத்தவே செய்தது...

ஒரு மனிதர் வாழ்ந்து முடித்த பிறகு அவரிடம் எவ்வளவு கோடியில் சொத்து இருக்கிறது என்பது அடையாளம் அல்ல... தர்ம சிந்தனை உள்ள மனிதர் தான் தனது அடையாளத்தை இந்த பூமியில் புகழாக மக்கள் மனதில் நீங்காத செல்வமாக விட்டு செல்ல முடியும் என்பதை மீண்டும் சத்தம் இல்லாமல் நிரூபித்து இருக்கிறார் கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்... இவரிடம் இருந்தாவது இன்றைய அரசியலில் கால் பதிக்க நினைக்கும் இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்... சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன... ஆனால் தயைக் கூர்ந்து அரசியலை தேர்ந்தெடுக்காதீர்கள்... 🙏. அரசியல் என்பது மக்கள் மனதில் ஏதோவொரு நல்ல வகையில் எப்போதும் நினைவு கூறும் வகையில் அமைத்துக் கொள்வதே நல்ல அரசியல்வாதிகளுக்கு அழகு...அதை தான் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அமைதியாக உணர்த்தி காற்றோடு கலந்து இருக்கிறார் அந்த கள்ளம் இல்லாத மனிதர்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக