பக்கங்கள்

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மார்கழி அனுபவம்


அந்த இளங்குளிரும் 

சாரக்காற்றையும்

அனுபவித்துக் கொண்டே 

போர்வையை தலை வரை போர்த்தி

மனதுக்குள் அந்த கிருஷ்ணரை

எங்கோ இருந்து தவழ்ந்து வரும்

திருப்பாவையை காதின் வழியே

சுவைத்து கண்மூடி பேரானந்தத்தை

அனுபவித்து விடுவதை விடவா

நிர்பந்தமாக எழுந்து வாசலுக்கு 

தண்ணீர் தெளித்து கோலம் இட்டு

கோயிலுக்கு சென்று தீபம் இட்டு

வந்து விடுவதில் இருந்து விட

போகிறது?

#மார்கழி அனுபவம்.

நாள் டிசம்பர் 18/12/23.

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக