பக்கங்கள்

வியாழன், 23 நவம்பர், 2023

எழுத்தாளனும் எழுத்தும்

 


எழுதி சம்பாதிக்கலாம் என்று இங்கே ஒரு டிரெண்ட் தற்போது... இப்படி நிறைய இணைய தளங்கள் தற்போது வருகிறது..நிச்சயமாக அப்படி அழைக்காதீர்கள்...

ஒரு உண்மையான எழுத்தாளன் நிச்சயமாக

அதை விரும்ப மாட்டான்.. ஏனெனில் இங்கே எழுத்தாளனுக்கு பார்க்கும் காட்சிகள் தமது வாழ்வியலில் இருந்து எடுத்த துளிகள் இப்படி அவன் மனம் பாதித்த விசயத்தை எழுதி விட்டு போய் விடுவான்... ஆனால் இப்படி குறிப்பிட்டு இந்த நேரத்தில் இத்தனை மணிக்குள் இத்தனை வார்த்தைகளில் இந்த மாதிரி எழுதுங்கள் என்று நீங்கள் நெருக்கடி கொடுத்தால் அதில் பங்கேற்கும் எழுத்தாளர்கள் எழுத்தில் நிச்சயமாக உயிரோட்டம் இருக்காது.. வெறும் வார்த்தை குவியல்களால் வாசிப்பாளனும் எதுவும் கற்றுக் கொள்ள முடியாது..சுருங்க சொல்ல போனால் வெறும் சக்கையாக தான் பெரும்பாலும் அந்த எழுத்து இருக்கும்.. இதில் மிக சொற்பமான விதிவிலக்குகள் இருக்கலாம்...

அதனால் ஒரு சின்ன திருத்தம் அப்படி இணைய தளம் ஆரம்பிப்பவர்களுக்கு...

உயிரோட்டமாக எழுத வாருங்கள்..என்று அழையுங்கள்..

அதுவே சரியாக இருக்கும்..

#எழுத்தாளனும்எழுத்தும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக