பக்கங்கள்

புதன், 8 நவம்பர், 2023

எழுத்தாளன் எனும் கிறுக்கன்

 


அத்தனை துன்பங்களையும்

ரா முழுவதும் எழுதி எழுதி 

தீர்த்து விட்டு

சக்கையாக...

உறங்க போகும் முன் 

காலத்திடம் கண்ணீரோடு

ஒரு கோரிக்கை வைக்கிறான்...

சிறிது உனது மடியில்

ஓய்வெடுத்துக் கொள்ளட்டுமா என்று 

எழுத்தாளன் எனும் கிறுக்கன்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள் 08/11/23.

நேரம் 8:15.

2 கருத்துகள்: