பக்கங்கள்

திங்கள், 13 நவம்பர், 2023

கொஞ்சம் கருணை காட்டு ரெங்கநாதா...


 ரெங்கநாதா !எப்படியோ என் கணக்கில் எமது மாநிலத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் தற்போதைய நிதியமைச்சர் கனவில் தங்களது திருக்காட்சி கொடுத்து எனது கணக்கில் ஒரு 50 லட்சம் ரூபாய் போட சொன்னால் நான் அதை வைத்து எனது எழுத்துக்களை புத்தகமாக்கிக் கொண்டு இங்கே பல எழுத்தாளர்களுக்கும் புத்தகம் பதிப்பு செய்து அவர்களை மகிழ்வித்து பார்ப்பேன்... மேலும் எழுத்தாளர்கள் கூட்டம் கூட்டி விவாதம் மாதம்  ஒருமுறை கூடி பேசுவதற்கு மற்றும் அப்போது ஆகும் உணவு மற்றும் போக்குவரத்து செலவு எல்லாவற்றிற்கும் வைத்துக் கொள்வேன்... ஏனெனில் நான் எழுதியதை எல்லாம் புத்தகம் போட வேண்டும் என்று வீட்டில் காசு கேட்டால் வடிவேலு பாணியில் ஏதே! என்று கேட்டு திட்டுகிறார்கள்...திட்டி கம்முனு விட்டு விட்டால் கூட பரவாயில்லை... இப்படி எதையோ அலைபேசியில் தட்டிக்கிட்டே இருக்கிறாயே இதனால் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா என்று வேறு கிண்டலடிக்கிறார்கள்...ஏதோ ஒரு சிலர் உங்களை போல எல்லாம் எழுத வேறு எவராலும் முடியாது என்று சொல்வது மட்டும் அல்ல எதிர் காலத்தில் எனது எழுத்துக்களை ஆராய்ச்சி செய்வார்கள் என்று ஒரு சகி சொன்னார்கள் அவர்களும் #ஆல் #இந்தியா #ரேடியோ தொகுப்பாளர் தான்... இப்படி கருணை உள்ளம் கொண்டவர்களுக்காக எனது எழுத்துக்களை நேசிப்பவர்களுக்காக நான் அவர்களை மகிழ்விக்க எழுத வேண்டும்... நான் சொல்வது அந்த வைகுண்ட நாதருக்கு புரிந்தால் போதும்.. நிச்சயமாக நமது நிதியமைச்சர் எனக்கு வீடு தேடி வந்து பணம் கொடுத்து விட்டு ஆசியும் வழங்கி விட்டு போவார்... கொஞ்சம் கருணை காட்டும் ரெங்கநாதா 🙄😒🔥.

#எழுத்துமீதுமோகம்கொண்டகிறுக்கி

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக