பக்கங்கள்

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

இரவு சிந்தனை 🐾

 


தற்போது உறங்க வேண்டும் என்று என்னிடம்

இமைகள் கெஞ்சுகிறது...

மனதின் கற்பனையோ இன்னும் ஒரு கவிதை எழுதி விட்டு போயேன் என்கிறது...

இங்கே ஆழ்ந்த உறக்கத்தை தவிர வேறெதுவும் சுகம் இல்லை என்று மனதிற்கு உரைத்து விட்டு உறக்கத்தின் பக்கம் தீர்ப்பை சொல்லி விட்டேன் என்று

கற்பனை கோபித்துக் கொண்டு மனதின் ஒரு மூலையில் சிறு பிள்ளை போல முடங்கி விட ஓடுகிறது..

நான் அதை காலையில் சமாதானம் செய்து அழைத்து வந்து விடுவேன்..

தற்போது அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் இணையவழி சொந்தங்களே 🙏✨😊🎻.

#இரவுசிந்தனை.

#நேரம் 10:32.

நாள் செப்டம்பர் 10.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக