பக்கங்கள்

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மறக்காமல் ஒரு கோரிக்கை...

 


சுவை நிறைந்த வாழ்க்கையை ரசிக்க வேண்டும்.ஆனால் நாம் அதை சுவைக்காமலேயே வெறுப்புடன் எறிந்து விடுகிறோம்.. ஒரு தேடலில் எல்லாமே வாய்த்து விடுமா என்ன என்று எவரும் தமக்கு தாமே கேள்வி கேட்பதில்லை..எல்லாமே நமக்கு எளிதில் மிகவும் விரைவாக வேண்டும் என்கின்ற மனப்போக்கிலேயே வாழ பழக்கப்பட்டு விட்டோம்..அதோ அங்கே மிகவும் மெதுவாக சிறகை அசைத்து பறக்கும் அந்த பறவையை ரசிக்க மனம் இல்லாமல் எதையோ துரத்தி ஓடுவதில் என்ன ருசி இருந்து விட போகிறது என்று எவரும் தமக்கு தாமே கேள்வி கேட்பதில்லை.. ஆனால் எமன் வரும் நேரத்தில் மட்டும் மறக்காமல் ஒரு கோரிக்கை நம்மில் பெரும்பாலானவர்கள் வைக்கிறோம்... உனக்கு என்ன அவ்வளவு அவசரம்.. நான் இன்னும் வாழ்க்கையை வாழவே தொடங்கவில்லை என்று...

#வாழ்வின்சுவை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக