பக்கங்கள்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

நடுநிசி கவிதை 🍁


 ஒரு சாம்ராஜ்யம்

 பிரமிக்க வைக்கிறது!

இன்னொரு சாம்ராஜ்யம் 

அதிசயிக்க வைக்கிறது !

இங்கே இந்த இரண்டுக்கும் இடையே

ஒரு மெல்லிய கோடாக

துருவ நட்சத்திரமாக 

எப்போதும் ஒளிரும்

சாம்ராஜ்ஜியம் மட்டும்

நடப்பதை தமது பிரகாசமான 

ஒளியால்..

அளவிடுகிறது...

எல்லா ராஜாக்களுக்கும் 

ஒரு அழிவு நிச்சயம்

துருவ ராஜா மட்டும் 

எப்போதும் பிரகாசமாக

அந்த விண்ணில்

எந்தவித ஆரவாரமும் இல்லாமல்

பிரகாசித்து அந்த விண்ணுகத்தை

தனது ஒளியால் வசீகரிப்பார்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக