பக்கங்கள்

வியாழன், 20 ஜூலை, 2023

நாட்டின் அவமான சின்னம் ஆள்பவர்கள்

 


எப்போதும் மதம் மதம் என்று ஒரு அரசாங்கம் வெறிப்பிடித்து அலைந்தால் இந்த தேசத்தில் தரக் குறைவான அசிங்கமான விசயங்கள் தான் நடக்கும் என்பதை மணிப்பூரில் அந்த இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரமான தரக் குறைவான அத்துமீறல் காட்டுகிறது... அங்கே கலவரம் மாதக் கணக்கில் நடக்கிறது.. அது பற்றி எதுவும் கவலைக் கொள்ளாமல் நாடு நாடாக ஒரு பிரதமர் சுற்றுகிறார்.. உள்துறை அமைச்சர் அங்கே நடக்கும் விசயத்தை வேடிக்கை பார்க்கிறார்.. இது நாடா அல்லது வேறு ஏதேனுமா என்று கேட்க தோன்றுகிறது... எப்போதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் தீவிர மத பிரசாரம் மத துவேஷ அரசியல்...இதையே கேட்டு கொண்டு இருக்கும் காதுகள் இப்படி தான் தரக் குறைவாக நடக்க தூண்டும்.. இது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.. இந்த அசிங்கமான செயலுக்கு பிரதமரும் உள் துறை அமைச்சரும் அங்கே நடத்தும் அரசாங்கமும் இந்த நீங்காத பாவத்தை அனுபவிப்பார்கள்..அறிவுகெட்ட ஒரு அரசியல் கட்சி மனிதாபிமானமற்ற ஒரு அரசியல் கட்சி தேச மக்களின் #உணர்வுகளை #பொசுக்கும் தரக் குறைவான அரசியல் கட்சி என்று சொன்னால் நிச்சயமாக அது பிஜேபி தான்.. உள்நாட்டில் உங்கள் கௌரவத்தை உங்கள் மக்களின் கௌரவத்தை காப்பாற்ற முடியவில்லை..உலக தமிழர்கள் பெருமையாக நினைக்கிறார்கள்.. அங்கே இருக்கும் மக்களுக்கு என்ன தெரியும்.. இங்கே நடக்கும் அட்டூழியங்கள்... மிகவும் அருவருக்கத்தக்க அரசாங்கத்தால் ஆளப்படுகிறோம் என்று நினைப்பது மிகவும் மோசமான விசயம்... பிரதமர் பேச அருகதையற்றவர்.... தேசத்தின் இந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் என்று மாறுமோ இறைவா 🔥😢..

#இன்றையதலையங்கம்.

#நாட்டின் #அவமான #சின்னமாக #ஆளும் #அரக்கர்கள்.

#மணிப்பூர் #தீ

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக