பக்கங்கள்

செவ்வாய், 20 ஜூன், 2023

பித்தரும் நானே ஞானியும் நானே

 

பிரபஞ்சத்தின் நேசத்தை

ஏந்திக் கொண்டு

சஞ்சாரம் செய்கிறேன்!

ஒரு ஞானியாக!

இங்கே என்னை வசைப்பாடுகிறார்கள்

ஒரு பித்தர் என்று!

இங்கே ஞானியும் பித்தரும்

எனக்குள் கரைந்து

பேரொளியாக வியாபித்து

அவர்களுக்கு காட்சி கொடுக்கும் போது

பறந்து நடுங்கி

ஓடி விடுகிறார்கள்

ஒரு அலறலோடு....

இப்போதும் அவர்களிடம்

என்னை பற்றி புரிதல் இல்லை எனும் போது

நான் கவலையடைகிறேன்

அவர்கள் அறியாமையை நினைத்து!

#இசைசாரல்வானொலி.

#காலைகவிதை..

#பிரபஞ்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக