பக்கங்கள்

புதன், 7 ஜூன், 2023

எனக்குள் இருக்கும் அந்நியன்..

 


வானொலியில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி தினமும் எமது கிருஷ்ணா இணையதள வானொலியில் வார நாட்களில் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை கொடுத்து வருகிறேன்.. இந்த நிகழ்ச்சியை பாராட்டி நிறைய நேயர்கள் படைப்பாளிகள் பாராட்டி பேசுகிறார்கள்.. அவர்களுக்கு நன்றி 🙏..

ஆனால் விசயம் அதுவல்ல.. எனது வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு மிகவும் மென்மையான குரல் உங்களுடையது; நீங்கள் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது என்று படைப்பாளிகள் தொடர்புக் கொண்டு பேசும் போது இலக்கியம் மற்றும் பல விசயங்களை பேசும் வரை உரையாடல் மிகவும் அழகாக தான் செல்கிறது.. பிறகு அவர்களுக்கு அரசியல் தெரிந்து ஒரேயொரு கோடிட்டு பேசினால் நான் அது வரை இருந்த மென்மையில் இருந்து விலகி அவர்கள் எனது பேச்சை கேட்கிறார்களா இல்லையா என்று கூட யோசிக்காமல் பேசிக் கொண்டே இருந்து விட்டு எங்கே அவர்கள் இருக்கிறார்களா அலைப்பேசி உரையாடலில் என்று ஹலோ கேட்கிறீர்களா என்று கேட்கும் போது ஆம் சகோதரி கேட்கிறேன்... ஆனால் இது நீங்களா என்று சந்தேகம் வந்து அடிக்கடி அலைபேசியை சோதித்து கொண்டேன்.. ஏதேனும் கிராஸ் டாக்கா என்று சொல்லும் போது தான் தெரிகிறது இவ்வளவு நேரம் எனக்குள் இருக்கும் அந்நியன் வெளிப்பட்டு பேசிக் கொண்டு இருக்கிறான் என்று..

ஏன் இப்படி நடக்கிறது எனக்குள்? எனக்குள் இருக்கும் அந்நியனை எப்படி விரட்டுவது? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எனக்குள்...🤦😌🎸🎶

#இளையவேணிகிருஷ்ணா.

07/06/2023.

புதன் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக