பக்கங்கள்

சனி, 20 மே, 2023

இரவு சிந்தனை ✨

 

நெருக்கடிகள் வரும் போது நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.எந்தவித சவால்களையும் எதிர் கொள்ள தயங்க வேண்டாம்.ஏனெனில் சவால்கள் தான் நமக்கு வாழ்வியலை புரிந்து கொள்ள உதவுகிறது.எப்போதும் பாதுகாப்பாக வாழ்க்கை பயணம் செய்ய எத்தனிக்க வேண்டாம்.அப்படி செய்யும் போது ஒருவித சலிப்பு தட்டிவிட்டு விடுகிறது.வாழ்வியல் எனும் புத்தகத்தில் நிறைய பக்கங்களை புரட்டாமலேயே வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் அதிகம்.. அப்படி இல்லாமல் வாழ்வின் எல்லா பக்கத்தையும் நிதானமாக படித்து சுவைத்து நமது வாழ்வை கொஞ்சம் கடப்போமே!! என்ன நேய சொந்தங்களே 😊

#இரவுசிந்தனை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக