பக்கங்கள்

புதன், 19 ஏப்ரல், 2023

குரங்கும் நமது சம்சாரமும்

 

ஒரு குரங்கு 🐒 எப்படியோ ஜன்னல் வழியாக வீட்டில் புகுந்து விட்டது... அந்த ஜன்னலை தெரியாமல் மூடி விட்டு எமது வீட்டு வாசல் கதவை அகலமாக திறந்து வைத்தேன்... ஆனால் அது மூடி இருந்த ஜன்னல் பக்கம் போவதும் வருவதுமாக வீட்டின் உள்ளே சுற்றி சுற்றி வருவது மட்டுமல்லாமல் என்னை அப்போதைக்கு அப்போது முறைத்தும் பார்க்கிறது...எனக்கோ இதற்கு தான் இவ்வளவு பெரிய கதவை திறந்து வைத்து வழி ஏற்படுத்தி உள்ளேனே... இதன் வழியில் வெளியே சென்றால் தான் என்ன என்று ஆச்சரியம்... பிறகு சிறிது நேரத்தில் அது வந்த ஜன்னலை திறந்து விட்டது தான் தாமதம்...ஒரே தாவலில் வெளியே ஓடோடி சென்று விட்டது...இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நமக்கும் கூட மிக பெரிய பிரமாண்டமான வாசல் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார் நம்மை படைத்த இறைவன் நாம் பிறவி சூழலில் இருந்து விடுபட்டு முக்தி அடைவதற்காக...நாமோ மீண்டும் மீண்டும் கருவறை வாசலிலேயே தவம் கிடக்கிறோம் மீண்டும் மீண்டும் பிறந்து இந்த சம்சார காட்டில் பித்து பிடித்து அலைவதற்காக... ஏன் எனில் நமக்கு தெரிந்ததெல்லாம் கருவறை வாசனை தான் அல்லவா... எத்தனை கோடி பிறவி எடுத்து எடுத்து பிறந்தும் நமக்கு இதில் ஒரு வைராக்கியம் வரவில்லையே என்று நினைத்தால் அது தான் மாயை என்று நமக்கு நன்றாக புரிகிறது அல்லவா நேயர்களே 🎻✨🎉.

#இசைச்சாரல்வானொலி.

#இரவுசிந்தனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக