பக்கங்கள்

சனி, 29 ஏப்ரல், 2023

ஒரு குட்டிக் கதை

 


ஓர் இரவு... ஓர் கனவு:-நல்ல உறக்கத்தில் அந்த தந்தையும் அந்த சிறு வயது மகளும் அந்த வீட்டை விட்டு வெளியே தள்ளப்படுகிறார்கள்... மிகவும் மோசமான ஏழ்மை நிலை... நடந்துக் கொண்டே இருக்கிறார்கள்.. அவர்கள் சாலை பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் போது திடீரென மேகம் சூழ்ந்து இடி மழை... அந்த பெண் குழந்தை தந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.. ஆழ்ந்த பயம் அவள் மனதை ஆக்கிரமித்து இருந்தது அவள் தந்தையை இறுக்கமாக பிடித்த பிடியில் தெரிந்தது.. தந்தை மெல்லமாக அவள் பிடியை விடுவித்து அவளிடம் சொல்கிறார்...மகளே... இந்த இடியை பார்த்து ஏன் இவ்வளவு நடுக்கம்? இதுதான் வாழ்வின் சூட்சுமத்தை உனக்கு உணர்த்தும் முதல் புள்ளி... இதுதான் உனக்கு வாழ்வின் சூட்சுமத்தை எதிர் கொள்ள கற்றுத் தரும் முதல் பாடம்.. கவனமாக தைரியமாக கற்றுக் கொள் என்றார்.. மகளும் சரி தந்தையே...என்று பயம் விலகியவளாக சிறிது சிறிதாக தன் தந்தையின் பிடியில் இருந்து தனித்து நின்று அந்த சூட்சம பாடத்தை கற்க தயாரானாள்...

இப்படி தான் வாழ்வின் சூட்சம பாடம் நமக்கு நிறைய தனியாக எதிர் கொள்ள கற்றுத் தருகிறது...அதை நாம் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை மிகவும் அழகாகும்...

#வாழ்வியல்கதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக