பக்கங்கள்

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

கவலையை மறக்க...

 


சிலபேர் கவலை என்று ஒன்று இருந்தால் அதைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருப்பார்கள்.அவர்களை அவ்வளவு எளிதாக சமாதானப்படுத்த இயலாது.. நான் அவர்களிடம் கேட்கிறேன் நீங்கள் அந்த கவலை தரும் விசயத்தை யோசித்துக் கொண்டே இருந்தால் கவலை தீர்ந்து விடுமா.. இல்லை தானே.. பிறகு ஏன் பிடிவாதமாக அதை உங்கள் மனதில் தேக்கி வைத்து மனதை துன்புறுத்துகிறீர்கள்.. நான் அதற்கு ஒரு தீர்வு தருகிறேன்..

அதாவது கவலை உங்களுக்கு இருக்கும் போது அதை கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு உங்களுக்கு மிகவும் விருப்பமான உணவை மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.. அப்போது அந்த கவலை தரும் விசயத்தை நீங்கள் கண்டிப்பாக மனதில் இருந்து தூர எறிந்து விட வேண்டும்..

நன்றாக உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வாருங்கள்.. மிகவும் நிதானமாக அந்த உணவை ருசித்து சாப்பிடுங்கள்.. பிறகு நிச்சயமாக அந்த கவலை தரும் விசயத்தை எங்கே என்று தான் தேடுவீர்கள்..

இங்கே உயிரோட்டமான விசயங்கள் ஆயிரம் ஆயிரம் உள்ளது.. இந்த மாதிரி கவலை உணர்வுகளை சுமந்து திரியாதீர்கள்.. இங்கே எதுவும் பெரிதல்ல.. வாழ்வின் சுவையை தவிர..சரியா நேயர்களே 🎻✨🎉

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக